பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்பெற வேண்டும் செழித்தே| பள்ளரும் மள்ளரும் - வெள்ளப் பெருக்கினைப் பார்த்து மகிழ்ந்துகை கோர்த்துக் குதித்துமே பாடிக் களிப்பதே சந்தாம்!-கொட்டி ஆடி இசைப்பதே சிந்தாம்! தெள்ளு தமிழினில் உள்ளம் பறித்திடும் முந்தைத் தமிழ்மொழிச் சிந்து வகையெலாம் கன்னித் தமிழ்மகள் சொத்தாம்!-இ சைப் பொன்னித் துறைமுக முத்தாம்! எண்ணத் துடிப்பினில் வண்ணக் கலப்பினில் பாவலர் சண்முக சுந்தரம் பாடிய உளங்கவர் தீந்தமிழ்ச் சிந்தும்-தெங்(கு) இளநீர்ச் சுவைதர முந்தும்! கோவலர் தீங்குழல் umsusDir sr. Dr. SF. கூவு குயிலிசை மேவு தமிழ்மொழிச் சிந்து வளர்ந்து தழைத்தே-மீண்டும் சீர்பெற வேண்டும் நிலைத்தே| 25-9-'71