பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்து: மலைத்தேன்! காவேரி நாதன் எழுதும் கவிதைநற் பாவேறி வந்த படிகண்டேன்!-மாவேறிக் கோதும் குயிற்பிள்ளை கூட்டும் இளம்பாடல் காதிற் கினிய கவி! - - t இள கீர் இயல்மிகு காவேரி நாதன் "இளையர் கவிதை"யாம் ஏட்டின் விளைவே 'மலைத்தேன்’ வரக்கண்டேன்! சற்றே மலைத்தேன்! மலைத்தேன் மலைத்தேனே யர்ம்! 2. காவேரி நாதன் கவிபாடி இன்னும் நற் பாவேறும் சீர்கள் பயிலுகவே!- காவேறும் நற்றமிழ்போல் வாழ்க! நலம்பெறுக! என்றென்றும் பொற்பறிவில் வாழ்க பொலிந்து! 3 30-6-70 மலேசிய நாட்டுப் பொந்தியான் ஜோகூர் காவேரிநாதன் எழுதிய இளையர் கவிதை மலைத் தேனுக்கு வழங்கிய அணிந்துரைக் கவிதை இது. -