பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii மாறிப் படித்துக் கொண்டிருந்தேன். புதுவையில் நான் நான் காம் வகுப்புப் படிக்கும் போது பாவேந்தர் தமிழ் வகுப்பு நடத்தி வந்தார். நான் வில்லியனுாரில்தான் நிலைத்துப் படிக்கத் தொடங்கினேன். அங்கே தலைமையாசிரியராக இருந்தவர் சி. சு. கிருஷ்ணன் அவர்களாவர். அவர் தமிழ்ப் பற்றும் பிரெஞ்சுமொழி வளமும் நிறைந்தவர். எல்லப்ப வாத்தியார், முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை ஆகியோர் என் வகுப்பிற்குத் தமிழ்ப் பாடம் நடத்தி வந்தார்கள். புதுவையில் பாவேந்தர் பாரதிதாசனால் என்னுள் இடப்பட்ட தமிழ் வித்து வில்லியனுணர் தமிழாசிரியர்களால் செடியாக மாறியது. தலைமையாசிரியர் கிருஷ்ணனால் நீர் ஊற்றி வளர்க்கப்பட்டது. அது முதல் எனது தமிழுணர்வு மேலோங்கத் தொடங்கியது. வகுப்புகளை மேற்பார்வையிட வரும் தலைமையாசிரியர் எங்கள் செய் யுள் வகுப்பில் முதல் இரண்டடியைச் சொல்லிப் பின்னிரண் டடியைக் கேட்பார்; நானே முதலில் சொல்ல எழுவேன். 'ஏய் முந்திரிக் கொட்டை உட்கார்' என்பார் தலைமை யாசிரியர்.மற்ற மாணவரிடமிருந்து பதில் வராத பின்னரே என்னைக் கூறச்சொல்வார். முழுச்செய்யுளையும் பிழை யறப் பாடுவேன். தமிழாசிரியரும் தலைமையாசிரியரும் என்னைப் பாராட்டுவார்கள். அன்று நான் அடைந்த மகிழ்ச்சியை நினைத்துப் பார்க்கின் என் உள்ளம் விம்மு கிறது. அற்றை நாளில், E. S. L. C. யைப் போன்று "செர்த்தி பிகா என்ற தேர்வு நடைபெறுவதுண்டு. அதில் குறிப்பிட்ட வகுப்பிலிருந்தே மாணவர்களைத் தேர்வுக்கு அனுப்புவர். வெவ்வேறு ஆசிரியர்கள் கண்காணிப்பில் புதுவையில் நடை பெறும் அத்தேர்வில் மொழிப் பாடம், கணக்கு, கட்டுரை, செய்யுள், இலக்கணம், சொல்வதெழுதுதல் ஆகியன எழுத் தாலும் வாய்மொழியாலும் இடம்பெறும். இதில் வெற்றி பெற்றோர்க்குச் சான்றிதழ்கள் வழங்கப்பெறும். இந்தப் பொதுத் தேர்வெழுத நான் குறிப்பிட்ட வகுப்பிற்கும் கீழ்