பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvii நால்வர் திருமணமானவர்கள். அவர்கள் வாயிலாக எனக்குப் பதினேழு பேரப் பிள்ளைகள் உள்ளனர். கவிதைத் துறையில் என் மாணவர் என்று குறிப்பிடத் தக்கவர் வித்துவான் பா. முத்து. அவரால் இயற்றப் பெற்ற கவிதை நூல் "இயற்கை இன்பம்" என்பதாகும். இன்றைய நிலை இன்றுள்ள என் தாய் நாட்டின் நிலையை நினைத்துப் பார்க்கின் என் நெஞ்சம் கொதிக்கின்றது. அடிமையாய் நாம் வாழ்ந்த காலத்தையும் இன்று நாமே நம்மை ஆளு ஒன்ற காலத்தையும் சீர் தூக்கிப் பார்க்கின் ஏதோ ஒர் பயங்கர எதிர்காலத் தோற்றம் என் கண் முன் தோன்று கிறது. நிரந்தரமற்ற அரசியல் போக்கும். பண்பும் நேர்மையுமற்ற அரசியல் தலைவர்கள் பெருக்கமுமே நாட்டில் எங்கும் காணப்படுகின்றன. * , விடுதலை பெற்று நாமே நம்மை இருபத்தாறு ஆண்டு களாக ஆண்டு வருகின்றோம். மற்ற நாடுகளைப் போன்று என்ன முன்னேற்றம் நாம் அடைந்துள்ளோம் என்கின்ற கேள்விக்குறியே தோன்றுகிறது. நம்முள் ஊறிப்போன சமுதாய ஊழல்கள்.சாதிமதப் பிணக்குகள், அறிவு விளக்க மின்மை, வறுமை, முதலியன'நம்மை விட்டு அகன்றதாகத் தெரியவில்லை. மாறாக அரசியல் காழ்ப்பு, லஞ்ச ஊழல், பதவிப்பித்து போன்ற நாட்டைச் சீரழிக்கும் கொடுஞ் செயல்களே இன்று தலைவிரித்தாடுகின்றன. விலைவாசி உயர்வுகள், உணவுத் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண் டாட்டம் போன்ற கொடுமைகள் நாட்டில் மலிந்து விட்டன. விடுதலை பெற்றால் நாட்டில் பாலும் தேனும் வழிந்தோடும் என்று அன்று பறைசாற்றப்பட்டது. ஆனால் இன்று, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதியால் பெயரிடப்பட்ட ஏழைகளின் பஞ்சப்பர்ட்டும்