பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 9 பிறப்பினிலே சாதிபல பிறப்பித்து வாழ்ந்தாலும் பிறந்து பின்னர் இறப்பினிலே வீழாமல் எவரிருந்தார் எங்காட்டில் என்று கேட்டால் சிறப்பினிலே வாழ்கின்றார் செத்தாரும்: அஃதில்லார் சீர்த்தி என்னாம்? வாழ்வாங்கு வாழ்ந்திருக்கும் பள்ளத்துள் நீர்நிலைக்கும் பாருலகில் மனிதரெனப் பல்லோர் கண்டோம் உள்ளத்துள் நிலைத்திருப்போர் ஓரிருவர் அன்றிமண்ணில் உண்டோ? சொல்வீர்! கள்ளத்துள் தூயநெறிக் கருத்தேற கன் மருந்தைக் கவியால் தந்த வள்ளத்துள் தேன்பாய்ச்சும் வள்ளுவனார் வாழ்கவென - வாழ்த்து வோமே! 1 0