பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பக் குடும்பம் மனைவி : ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று அதுவே போதும் மச்சான்!--இரண்டு அதுவே போதும் மச்சான்! காசே இல்லாத கஷ்டக் குடும்பம் . கருத்தினில் நிறுத்து மச்சான்!-இதை நீ கருத்தினில் கிறுத்து மச்சான்! கணவன் : குளத்தில் மூழ்கிக் கோயிலைச் சுற்றிக் கும்பிடு போட்டாலும்-செல்லாத்தா!-கித்தம் கும்பிடு போட்டாலும் உளத்துக் கவலை மாற்றும் குழந்தை ஒருசிலர்க் கில்லையடி!--செல்லாத்தாடஏனோ ஒருசிலர்க் கில்லையடி! - - மனைவி ; குழந்தை இல்லாட்டிக் குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்தா போகும் மச்சான்-எங்காளுக் குறைந்தா போகும்? மச்சான்! குழந்தை மிகுந்தா குடும்பத்தில் இன்பம் குறைந்து போகும் மச்சான்!-வறுமை நிறைந்து போகும் மச்சான்!