பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சேர்த்து வைத்தால் அதுநாளை
    சேமநிதி யாகுமண்னே
வீட்டைத் தேடிவரும்
உதவியாம் சேமநிதி
உன்திண்ணை தேடிவந்து
உணவூட்டும் உண்மையிது!
நல்லதெல்லாம் செய்துவரும்
நம்முடைய வாழ்வுக்கு
அல்லல் தீர்க்கவொரு
ஆபத்து சம்பத்தாம்
சேர்த்தாலே நாள்தோறும்
சேமநிதி சஞ்சீவி
தாத்தாக்களை எல்லாம்
தனபாலன் ஆக்குமண்ணே (வீ)



              95