பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிராசை எதற்கடா? செத்த வீட்டில், சங்கீதக் கச்சேரி செய்வதேபோல் சந்தர்ப்ப வியாபாரக் கள்ளச் சந்தை சரக்கெல்லாம் கலப்படமாய்க் குப்பையாக்கி சரியாகக் காசாக்கும் சல்லிக்கூட்டம், சட்டசபைப் பதவிக்குச் சண்டையிட்டால் அந்நாட்டில் நீதிபதி என்ன செய்வான்? ஆண்டவர்க்கு அம்மண்ணில் வேலை என்ன? அந்நாட்டுக் கோயில்களில் பேயோ தெய்வம்! ? அந்நாடே தருமத்தின் து.ாக்குமேடை அநியாய விஷக்காடு அந்த நாடே! 27