பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாஞ்சாலிப் பெண்மையைச் சீரழித்த பாவி துச்சாதனன் கலைஞன் என்ருல்... பாரதத்தில் இன்றுபல பெரியோரெல்லாம் பெருங்கலைஞர் அவர் நன்கு வாழ்க! வாழ்க! ! பாருக்கோர் பாரந்தான் இந்த நாடு, பரிதாபம், பரிதாபம், பரத நாடே! வேசிமகள் கண்ணகிக்குச் சிலையெடுத்தால் வீரமிலான் திருமகளைக் கைப்பிடித்தால் ஆசைமகன் அதிகாரி ஆகிவிட்டால், அந் நாட்டில் நல்லவர்கள் ஏணிப்பார்...? அமரமகா கவியரசர், ஏன் பிறப்பார்? அம்மண்ணை உலகந்தான் ஏன் மதிக்கும்? 26