பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையாழ்வார் గ్రీ வும் இருப்பதால், அம்முறையில் அவனுக்கு இனிய பொருளாயும் இருக்கின்றார். இக்காரணத்தால் இவரே அருள் நிறைந்த புருஷகாரமாக அமைந்து விடுகின்றார். இதனால் இவர் உயிர்களுக்கு அருள் நிறைந்த புருஷகார மாக இருந்து இருவரையும் உபதேசத்தால் திருத்துகின்றார் (முமுட்சு-128). இதனை பூர்வசன பூஷணமும், "இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே (வாக், 12) என்று பகர்கின்றது. இதனை நன்கு விளக்க வேண்டும். எம்பெருமாட்டி இறைவனை நோக்கி இவ்வாறு பேசுவாள்: 'சேதநனுடைய குற்றங்களைக் கணக்கிட்டு நீர் இப்படித் தள்ளிக் கதவடைத்தால் இவனுக்கு வேறு புகல் உண்டோ? உனக்கும் இவனுக்கும் உண்டான உறவு முறையைப் பார்த்தால் உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது (திருப். 28) என்கின்றபடி குடநீர் வழிந்தாலும் போகாதது ஒன்று உண்டோ? உடைமையாக இருக்கின்ற இவனை அடைதல் சுவாமியான உம்முடைய பேறாக அன்றோ இருப்பது? எதிர் சூழல் புக்குத் (திருவாய் 2-7:5) திரிகின்ற உமக்கு நான் சொல்ல வேண்டுமா? காப்பாற்ற வேண்டும் என்ற விருப்பத்தோடு வந்த இவனைக் காப்பாற் றாது விட்டால் எல்லாப் பொருள்களையும் காப்பவர்' என்ற உம்முடைய தன்மை குலைந்து போகாதோ? அநாதி காலமாக நம்முடைய ஆணையை மீறித் தன் இச்சைப்படி ஒழுகிப் போந்த இவனைக் குற்றங்களுக்கேற்பத் தண்டிக்காமல் நாம் ஏற்றுக் கொள்ளின், நாம் ஏற்படுத்திய சாத்திரங்களின் மரியாதை குறையாதோ என்றல்லவா. தும் திருவுள்ளத்தில் ஒடுகின்றது? அங்கனமாயின் நும்மை நாடி வந்த இவனைக் காக்காமல் இவனுடைய குற்றங்களை மட்டிலும் நோக்கித் தண்டித்தால் உம்முடைய அருட்குணம் நிலைப்பது எவ்வாறு? இவனைக் காப்பாற்றிய பொழு தன்றோ உம்முடைய அருட்குணம் ஒளிபெறும் இவனைத் தண்டிக்கவில்லையேல் சாத்திரம் நிலையாது இவனைக்