பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీణ్ణి வாய்மொழியும் வாசகமும் திாயக நாயகியின பாவனை, திருமந்திரத்தின் பெருமை, பிரயத்தி நெறியின் அருமை போன்றவற்றை கண்டு மகிழ லாம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமாகக் காண்.ோழ், - கற்பனை : கற்பனை என்பது என்ன? புலன்கள் ஒரு பொருளை நேரே அநுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை தினைவிந்துக் கொணர்ந்து அப்பொருளினிடத்து மீண்டும் அதுபவத்தை ஏற்றவல்ல ஆற்றலே கற்பனை யாகும். இது கவிதையைக் கணிவித்துக் கற்போரின் மனத்தை விரித்த பார்வையில் செலுத்த வல்லது கவிதை யின் பிற பண்புகளுக் கெல்லாம் அடிநிலமாக இருப்பது இதுதான்; முடியாக இருப்பதுவும் இதுவேயாகும் . திருமங்கையாழ்வாரின் கற்பனை யெல்லாம் பக்தி கலந்த கற்பனையாகும், - * - திரிவிக்கிரமாவதாரத்தைக் காட்டுவதிலுள்ள கற்பனை யில் பகவதநுபவம் பெறுவதாய் இருப்பதைக் காணலாம். ஒண்மிதிவில் புனலருவி ஒருகால் கிற்ப ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து எண்மதியும் கட்ந்து அண்டம் மீதுபோகி' இரு வீசும்பின் ஊடுபோய் எழுந்து மேலைத் தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி . தாரகையின் புறக்தடவி அப்பால் மிக்கு மண்முழுதும் அகப்படுத்து கின்ற எங்தை மலர்புரையும் திருவடி (கெடுந் 5): என்பது திரிவிக்கிரமாவதாரக் காட்சி, குருட்சேத்திரப் போர்க்களத்தில் கண்ணன் காண்டீபனுக்குக் காட்டிய விசுவ ரூபக் காட்சியை யொத்தது இது. ン > எம் பெருமானின் திருதிருவடி பூமி, ஏழுகடல்கள், ஏழு இபங்கள், சக்கரவாள இரி, மகாசலம், அண்டகடாகம் அளவு சென்றதல்லாது ஆவரண நீரளவும் சென்று நின்றது: