பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வாருங்கள் பார்க்கலாம் கொடுக்காமல் செய்த பிரயாணத்தில் கண்ட காட்சிகள் அவை. திருஞான சம்பந்தராகிய ஞானக் குழந்தை தி ரு வ வ த | ர ம் செய்த சீகாழிக்கு, சேக்கிழார் ஒட்டிய விமானத்தில் செல்லும்போது இத்தகைய இன்பம் உண்டாயிற்று. அந்தத் த ல த் து க் கு ரெயில் வண்டியில் பிரயாணம் செய்து சென்று அடைந்தேன், வண்டி நின்றது. ரெயில்வே ஸ் டே ஷ னி ல் உள்ள பலகையைப் பார்த்தேன். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது, அந்தத் திருத்தலத்தின் அழகான பெயரை அந்தப் பலகையில் எழுதி யிருந்தார்கள் : சிய்யாழி என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்த அலங்கோலம் என் கண்ணக் குத்தியது. அந்தத் பலகையின் தலையில் இருந்த ஹிந்திப் பெயரைத் தாரால் அழித்திருந்த புண்ணியவான்கள் இந்தப் பெயரையும் சேர்த்து அழித்திருந்தால் எவ்வளவு நன்ருக இருக்கும் என் கையில் தார் இல்லை; மனசில் தைரியமும் இல்லே. இருந்தால்-? நடக்காத காரியத்தைப்பற்றி இப்போது பேசிப் பயன் என்ன? சேக்கிழார் காட்டிய பழைய காட்சியை நினைத்து ஆறுதல் பெற்றேன். r - சீகாழிக்குப் பன்னிரண்டு திருநாமங்கள் உண் டென்று படித்திருக்கிறேன். சீர்காழி என்று சொல் வதைவிடச் சீகாழி என்று சொல்வதுதான் முறை யென்றும் தெரிந்துகொண் டிருந்தேன். அந்தப் பெயரே ஆங்கிலத்தில் ஷியாலியாகவும் கொடுந் தமிழில் சிய்யாழியாகவும் மாறி நின்றதைக் கண்டு உள்ளம் வெதும்பாமல் இருக்க முடியுமா? - سمه... ندادماه همت حمصمم --سم --------

  • இப்போது இதைச் சீர்காழி என்று மாற்றிவிட்டார்கள்.