122 வாருங்கன் பார்க்கலாம் கோன் ஆளுர், வாக்கு வன்மையுடையவர்களை நாவலர் என்று சொல்வது வழக்கம். யாழ்ப்பாணத் தில் பிறந்து தமிழுக்கும் சைவத்துக்கும் ஈடு எடுப்பில், லாத தொண்டுபுரிந்து விளங்கிய ஆறுமுக நாவலரை நாவலர் என்று சொன்னலே போதும் ; அவருடைய சொற்பொழிவாற்றல் அவ்வளவு சிறப்புடையது. அப்படியெல்லாம் சிரமப்படாமல், நாவலர் பட்டம் கிடைக்க வேண்டுமானுல் திருநாவலூரிற் பிறந்தாற். போதும். அது நாவல் , அதில் பிறந்தவர் நாவலர். இது என் கற்பனை அன்று : சுந்தரமூர்த்தி நாயனுர் காட்டிய வழி; திருநாவலூரிற் பிறந்தவர்களிற். சிறந்தவராதலின் அவரை நாவலர்கோன் என்று சிறப்பித்துச்சொல்கிருேம், நாவல் மரத்தைக் கண்டவுடன் என் சிந்தனை இப்படியெல்லாம் ஓடியது. நல்ல வேளை கட்டுக் கதைகளாகிய நாவலே நான் நினைக்கவில்லை. அது. ஆங்கில வார்த்தை அல்லவா ? அதையும் சேர்த்துக் கொள்வதானுல் நாவலர் என்பதற்கு நான்கு பொருள் கள் கிடைக்கும். பழங்காலத்தில் நன்ருகக் கவி பாடுகிறவர்களே நாவலர் என்று சொல்வார்கள்; அது முதல் பொருள். பிறகு நன்ருகப் பேசுகிறவர்களே நாவலர் என்ருர்கள் ; இது இரண்டாவது பொருள். நாவல் எழுதுகிறவர்களே நாவலர் என்று சொல்ல லாம்; இது புதிய மூன்ருவது பொருள். திருநாவ லூரிற் பிறந்தவர்களே நாவலர் என்று கூறலாம்; இதற் குச் சுந்தரமூர்த்தி நாயனரின் வாக்கு ஆதாரம் ; இது கான்காவது பொருள்.