பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 வாருங்கள் பார்க்கலாம் இங்கே வந்து அவருக்கு மனேவாழ்க்கை வெறுப்பதற்குக் காரணம் என்ன? இந்த ஊர்ப் பதிகத் தில் ஒரு பாட்டில், "கூடும் மலமங்கை ஒருத்தியுடன் சடைமேற்கங்கை யா?ளச் சூடிற்றென்னே?" என்று கேட்கிருர். இறைவன் இரு மங்கைய ருடன் இருப்பவன். சுந்தரரும் இரு மங்கையரை மணந்தவர். ஆனல் திருவஞ்சைக்களத்தில் இறைவன் எப்படி இருக்கிருன்? ஒரு மங்கையும் இல் லாமல் தனியே இருக்கிருன்; அவனுக்கு மனே வாழ்க்கை வெறுத்து விட்டதுதான் இதற்குக் காரணமோ ? - சுந்தரர், அம்பிகையை விட்டுத் தனியே வாழும் அஞ்சையப்பரைக் கண்டு தாமும் மனே வாழ்க்கை யை வெறுக்கும் எண்ணம் கொண்டு, “வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்' என்று பாடினரோ ? என் சிந்தனை இப்படிச் சென்றது. இதை ஏதோ பெரிய ஆராய்ச்சி என்று யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். அம்மையும் அப்பனுமாக எழுந்தருளி யிருக்கும் சிவாலயங்களையே தமிழ்நாட்டில் தரிசித்துப் பழக்கமான எனக்கு அம்மையில்லா அப்பணுகத் திருவஞ்சைக்களத்தப்பன் எழுந்தருளியிருப்பதைக் கண்டபோது இப்படியெல்லாம் தோன்றியது. எங்களுடன் வந்து உதவி செய்த புராண சா ஸ் தி ரி நீராகவையரை வணங்கினேன். மறு.