பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை இல்லா அப்பன் 223 படியும் ஆடி மாசம் வாருங்கள்' என்ருர் ஆடிச் சோதியில் சுந்தரர் திருநாள் அல்லவா ? "நெடுந்நூரம் நிலத்திலும் கழியிலும் வந்து திருவஞ்சைக்களத்தைக் கண்டு கொண்டோம். அம்மை இல்லா அப்பனேக் கண்டோம். சரித்திரமும் தோத்திரமும் காவியமும் எழில் செய்யும் ஒரு புனிதத் திருப்பதியைத் தரிசித்தோம்’ என்ற திருப்தியோடு நண்பர்களுடன் திருவஞ்சைக்களத்தினின்றும் புறப் பட்டேன்.