பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வாருங்கள் பார்க்கலாம் விரித்தும் பார்த்தார். அங்கேயே நின்றுவிட்டார். மயில்மேல் ஏறிவரும் முருகன் திருவுருவத்தைக் கிழவன் அங்கே படைத்து முடித்திருந்தான். அந்த உருவத்தின் ஒவ்வோர் அங்கமும் குழைந்துஇழைந்து கொஞ்சியது. திருமுக மண்டலம் உயிர் பெற்று விளங் கியது. இத்தனே நேரமும் ரசிகர் கண்ட சிற்பங்களே யெல்லாம் எங்கோ தள்ளிவிட்டு இந்த முருக வடிவம் மேலோங்கி நின்றது. ரசிகர் உலகை மறந்து பார்த்தார். பிறகு சிற்பியைப் பார்த்தார். அந்தக் கிழவனுடைய கையில்தான் எத்தனே திறமை: அவர் எதையோ நினைத்துக் கொண்டார். கண்ணில் நீர் துளித்தது. அவனேப் பார்த்துப் பேசலானர் : அப்பா இந்த அழகிய உருவத்தை இந்த இருண்ட மூலேயிலே அமைக்கிருயே! இதை யார் அப்பா பார்க்கப் போகிறர்கள்? உனக்கு இந்த இடந்தான கிடைத்தது? மூலஸ்தானத்து விக்கிர கத்தைச் செய்யும்படி அல்லவா உன்னிடம் சொல்லி யிருக்க வேண்டும்? சொல், இதை யார் பார்த்து மகிழப் போகிருர்கள்?’ என்று கேட்டார். சிற்பி கனத்துக் கொண்டான். ஒருவரும் பார்க்க மாட்டார்கள் என்ரு சொல்கிறீர்கள்? அவர் கள் பார்க்க வேண்டாமே! ஒருவன் நிச்சயமாகப் பார்ப்பான் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு" என்று தலைநிமிர்ந்து அவன் சொன்னன். அவனுடைய நெஞ்சத் திண்மையைக் கண்டு ரசிகர் பிரமித்துப் போனுர். . • , கிழவன் கூறியபடி அவனுடைய சிற்பத்தை அந்த ஒருவன்தான கண்டான்? கோயிலேப் பார்க்க