பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 வாருங்கள் பார்க்கலாம் தாகக் கட்டிய அரண்மனையை இப்போது கான முடிவதில்லை; பெரிதாகக்கட்டிய அரனது மனையைக் காண்கிருேம். அரண்மனையும் பெரிதாக உறுதியாக இருந்தால் ஆலயங்களைப்போலவே அவைகளும் இன்று நின்று விளங்க வேண்டுமல்லவா? பாண்டியன் அரண்மனையும் மணிவாசகர் மாளிகையும் இ ல் லா வி ட் டா லும் அவர்கள் எக்காலத்தும் உள் ளத் தி ல் நினைந்து வாழ்ந்த சொக்கநாயகன் திருக்கோயில் இன்றும் மதுரையில் வழிபடும் பேராலயமாக விளங்கி வருகிறது. “ஒரு காலத்தில் இங்கே ஆயிரக்கணக்கான மக்கள் வழி பட்டார்கள்” என்று கதை பேச இடமாகவும் பழஞ்: சின்னக் காட்சிப் பொருளாகவும் இராமல் இன்றும். மக்கள் உள்ளம் தூய்மை பெறவும் அன்புடையோர் இன்ப அநுபவம் பெறவும் ஏற்ற இடமாக அக்கோயில் நிலவுகிறது. "இந்தக் கோயிலில் எங்கெங்கே மாணிக்க வாசகரைக் காணலாம்?’ என்ற கேள்வியோடு கோயிலின் பிராகாரங்களே வலம் வந்தேன். 2 திருவாதவூரர் இளமையில் பேரறிவுடையவராக விளங்கியதைக் கேள்வியுற்ற பாண்டிய மன்னன் அப்பெருமான வருவித்துத் தனக்கு முதலமைச்ச ராக வைத்துக் கொண்டான். அரசியல் நூலும் மனநூலும் நன்கு தெரிந்தவராதலால் திருவாதவூரர் மிகச்சிறப்பாகத் தம் கடமையை ஆற்றிவந்தார். பாண்டிய நாட்டிலும் பிற நாட்டிலும் உள்ளவர்கள் பாண்டிய மன்னனிடம் அன்பு பூண்டு பாராட்டும்