பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வாருங்கள் யார்க்கலாம் சமணனுதலின் சைன சமயத்தை ஆதரித்தான். எங்கும் சைன சமயப் பிரசாரம் சிறப்பாக நடை பெற்றது. அந்தப் பிரசாரத்திலும் சைன நூல்களிலும் அறிவைச் செல்லவிட்ட மருள்நீக்கியாருக்கு அந்தப் பக்கமாக அறிவு சாய்ந்தது. சமணர் ஆளுர். சாமானியச் சமணர் மாத்திரம் அல்ல; சமணர்களில் ஆசாரிய பதவியே அவருக்குக் கிடைத்தது. தரும சேனர் என்னும் பெயரோடு சைன சமயப் பிரவர்த்த: கராக வாழ்ந்தார். பெளத்தர்களோடு வாதம் செய்து' வென்ருர். - அறிவாராய்ச்சியிலே ஊறிச் சைன மதத்தில் ஈடு பட்டாலும் பரம்பரையாகச் சைவ நெறி நின்ற குலத்தில் பிறந்தமையால் அவரை அறியாமலே அவருடைய அடிமனத்தில் சைவ உணர்வு படிந்து கிடந்தது. சைனர்களுடன் சேர்வதற்கு முன் அவ ருடைய அறிவு சைன நூல்களின் நுட்பத்திலே புகுந்து ஆராய்ந்து கொண்டிருந்தது. சைனர்களைச் சார்ந்து தம் அரும்பெறல் தமக்கையராகிய திலகவதியாரைப் பிரிந்து வாழத் தொடங்கிய போது அவர் அடிமனத்தில் இருந்த சைவ உணர்வு தெளியலாயிற்று. ஒவ்வொரு நாளும் அந்தப் பழைய வாசன அவருடைய உள்ளத்தில் ஒரு பெரிய போராட்டத்தை உண்டாக்கியது. - இன்றும் அத்தகைய போராட்டம் ஒன்று தரும் சேனருடைய மனத்தில் நிகழ்ந்து தொண்டிருந்தது. இருள் புலரும் இந்த வைகறையில் அவருடைய,