பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii வதற்குப் பெரிதும் உதவின. இடையிடையே கவிகளின் நயத்தைப் பற்றிய பேச்சும் விரவி வரும். இவற்றைப் படித்து இன்புற்ற பலர் பாராட்டி எழுதி ஞர்கள். இக் கட்டுரைகளில், தலங்களில் உள்ள சில குறைபாடுகளைக் காட்டியிருந்தேன். அவற்றில் சிலவற்றை அந்தத் தலத்திலுள்ளவர்கள் பிறகு போக்கி விட்டார்கள். என் பயணத்தின் போது எடுத்த படங்களை இந்தப் புத் தகத்திற் சேர்த்திருக்கிறேன். இப்போது சில அமைப்புக் களின் தோற்றம் வேறுபட்டிருக்கலாம். இந்தத் தல யாத்திரையில் அங்கங்கே உள்ள கோயில் அதிகாரிகள் மிகவும் அன்புடன் எனக்கு உதவி செய்தார்கள். தருமபுர ஆதீனத்தலைவர்களும் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர்களும் இந்த முயற்சிக்கு ஆசிகூறி வேண்டிய உதவிகளை வழங்கினர்கள். பல அன்பர்கள் என்ளுேடு வந்து வழி. காட்டியும் தலங்களில் உள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் நலம் செய்தார்கள். இவர்களுக்கெல்லாம் என் மனங்கனிந்த நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் வந்து படங்களை எடுத்துதவிய அன்பர் பூரீ ராமகிருஷ்ணு, என் உ ட ன் பி ற வா த சகோதரர். அவருக்கு நன்றியுரை மட்டும் கூறினல் போதாது. அவருக்கு எல்லா நன்மைகளும் உண்டாக வேண்டும் என்று வாழ்த்து, கிறேன். இந்தப் புத்தகம் முன்பே வெளிவந்திருக்க வேண்டும். எழுதி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகே வருகிறது. இப்போ தேனும் வெளியாக இறைவன் திருவருள் பாலித்ததற்காக அவன் திருவடிகளே இறைஞ்சி வாழ்த்துகிறேன். - இனி, வாருங்கள், பார்க்கலாம், நால்வரோடு நெருங்கிய தொடர்புடைய தலங்களே ! - கி. வா. ஜகந்நாதன்