பக்கம்:வார்த்தை வாசல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிமதுரக் காவியத்தால் அத்தனை பே

ரையுந்துக்கி அடித்தான் கம்பன். இதுவரையில் செயங்கொண்டான் பரணியினை

வெல்லும் நூல் எழுந்த தில்லை. கதைவழியில் புதுவழியைத் தமிழர்க்குக்

காட்டியவர் கல்கி என்ருல் ; புதியநடை, புதியவழி, சிறுகதையில் புகுத்தியவர் புதுமைப் பித்தன்.

முத்தனுக்குப் பின்மு னியன் உழுதுபயிர்

செய்வதுபோல் முதிர்ந்த கல்விப் பித்தனுக்குப் பின்வந்து சிறுகதைகள் பயிர்செய்யும் பெரியோன் தந்த இத்திரப்பெண் திருமதிசிற் றம்பலத்தை

நான்தொட்டுச் சிலிர்த்தேன் ! நல்ல புத்தகத்தை ஏழெட்டு முறைபடிப்பேன் ;

அவ்வாறே புரட்டிப் பார்த்தேன்.

திறன்தோய்ந்த சிந்தனையால், தேன்தோய்ந்த தலைப்புகளால், செழித்த சொல்லால், சிறந்தோங்கும் சிறுகதைகள் பல எழுதிப்

பரிசுபெற்ற திறமை யாளர் அறந்தாங்கிப் பூவை நகர் எழுத்தாளர்

ஆறுமுகம் அவர்கள் ; வேங்கை மறம்தாங்கும் வீரர்விழி போற்சிறந்த சிறுதைகள் வழங்கி யுள்ளார்.

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/14&oldid=645699" இலிருந்து மீள்விக்கப்பட்டது