பக்கம்:வார்த்தை வாசல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ரம்போலா

கவிதைகள்

நாட்டைக் கெடுத்திடுவர்-அவர்

நஞ்சினை ஒத்தவர்; நெஞ்சம் நெளிந்தவர்

வீட்டைக் கெடுத்திடுவர்-அறி

வீணரெல் லாம்தமிழ் வாணரென் றெண்ணியே

ஏட்டைக் கெடுத்திடுவர்-வெறும்

எண்ணிக்கை யாளராம் கிண்ணிக் கவிஞர்கள்

பாட்டைக் கெடுத்திடுவர்-பிறர்

பாட்டுக்குள் ளேவிளை யாட்டு நடத்துவர்.


ஓலைக் கவிதைகளாம்-தமிழ்

ஓசை வளர்த்திடும் ஆசைக் கவிதைகள்

சோலைக் கவிதைகளாம்-சிறு

சோற்றுக்கும் கூழுக்கும் பாடும் கவிதைகள்

வேலிக் கவிதைகளாம்-பணம்

விட்டெறிந் தால்சிலர் கட்டும் கவிதைகள்

கூலிக் கவிதைகளாம்-பிழை

கொண்ட கவிதைகள் நொண்டிக் கவிதைகள்.

14