இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
ரம்போலா
கவிதைகள்
நாட்டைக் கெடுத்திடுவர்-அவர்
- நஞ்சினை ஒத்தவர்; நெஞ்சம் நெளிந்தவர்
வீட்டைக் கெடுத்திடுவர்-அறி
- வீணரெல் லாம்தமிழ் வாணரென் றெண்ணியே
ஏட்டைக் கெடுத்திடுவர்-வெறும்
- எண்ணிக்கை யாளராம் கிண்ணிக் கவிஞர்கள்
பாட்டைக் கெடுத்திடுவர்-பிறர்
- பாட்டுக்குள் ளேவிளை யாட்டு நடத்துவர்.
ஓலைக் கவிதைகளாம்-தமிழ்
- ஓசை வளர்த்திடும் ஆசைக் கவிதைகள்
சோலைக் கவிதைகளாம்-சிறு
- சோற்றுக்கும் கூழுக்கும் பாடும் கவிதைகள்
வேலிக் கவிதைகளாம்-பணம்
- விட்டெறிந் தால்சிலர் கட்டும் கவிதைகள்
கூலிக் கவிதைகளாம்-பிழை
- கொண்ட கவிதைகள் நொண்டிக் கவிதைகள்.
14