பக்கம்:வார்த்தை வாசல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டடம் கட்டுபவன்-ஒரு

கல்லொடு மற்ருெரு கல்லினைச் சேர்த்ததை ஒட்டிடும் தன்மையைப்போல்-பதம்

ஒட்டுவ தாலுரு வாகும் தமிழினில் பட்டமும் பெற்றவராம்-இவர்

பாட்டுப் படையல் நம் நாட்டுத் துறைமுகப் பட்டினம் பெற்ற கலம்-இது

பச்சைத் தமிழர்கள் மெச்சிடும் புத்தகம்.

நாட்டின் விடுதலையை-நிலை

நாட்டிட ரம்போலா தீட்டிய பாட்டுகள் கோட்டைக் கதவுகளாம்-புகழ்

கொண்ட விருத்தங்கள் சந்தச் சிலம்புகள். ஏட்டில் படுத்திருக்கும்-தமிழ்

எண்ணங்கள் பண்பட்ட வண்ணங்க ளாம்; இவை: ஊட்டும் உணர்ச்சியினுல்-தனி

ஊக்கம் பிறந்திடும் ! தூக்கம் பறந்திடும்!

ஒற்றை நிலாவெளிச்சம்-பல

ஊருக்கும் நாட்டுக்கும் ஒசை உலகுக்கும் முற்றும் பயன்படல்போல்-மொழி

மூதறி வாளரின் பாடல் பயன்படும். வெற்றி விளேச்சலிது-தமிழ்

வித்தை அறிந்தவர் முத்திரை நூலிது. கற்றுத் தெளிந்தவர்கள்-தரும்

கற்பனைப் பாடல்கள் நெற்பயிர் அல்லவோ?

பேராசிரியர் ரம்போலா மாஸ்கரானஸ் : அவர்கள் எழுதிய *ரம்போலா கவிதைகள்’ எள் னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு

1966-ஆம் ஆண்டில் வழங்கிய அணிந்துரை.

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/17&oldid=645705" இலிருந்து மீள்விக்கப்பட்டது