கட்டடம் கட்டுபவன்-ஒரு
கல்லொடு மற்ருெரு கல்லினைச் சேர்த்ததை ஒட்டிடும் தன்மையைப்போல்-பதம்
ஒட்டுவ தாலுரு வாகும் தமிழினில் பட்டமும் பெற்றவராம்-இவர்
பாட்டுப் படையல் நம் நாட்டுத் துறைமுகப் பட்டினம் பெற்ற கலம்-இது
பச்சைத் தமிழர்கள் மெச்சிடும் புத்தகம்.
நாட்டின் விடுதலையை-நிலை
நாட்டிட ரம்போலா தீட்டிய பாட்டுகள் கோட்டைக் கதவுகளாம்-புகழ்
கொண்ட விருத்தங்கள் சந்தச் சிலம்புகள். ஏட்டில் படுத்திருக்கும்-தமிழ்
எண்ணங்கள் பண்பட்ட வண்ணங்க ளாம்; இவை: ஊட்டும் உணர்ச்சியினுல்-தனி
ஊக்கம் பிறந்திடும் ! தூக்கம் பறந்திடும்!
ஒற்றை நிலாவெளிச்சம்-பல
ஊருக்கும் நாட்டுக்கும் ஒசை உலகுக்கும் முற்றும் பயன்படல்போல்-மொழி
மூதறி வாளரின் பாடல் பயன்படும். வெற்றி விளேச்சலிது-தமிழ்
வித்தை அறிந்தவர் முத்திரை நூலிது. கற்றுத் தெளிந்தவர்கள்-தரும்
கற்பனைப் பாடல்கள் நெற்பயிர் அல்லவோ?
பேராசிரியர் ரம்போலா மாஸ்கரானஸ் : அவர்கள் எழுதிய *ரம்போலா கவிதைகள்’ எள் னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு
1966-ஆம் ஆண்டில் வழங்கிய அணிந்துரை.
15