பக்கம்:வார்த்தை வாசல்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சை நகர்செல்வ ராசன்-சுவை

தங்கிய செந்தமிழ் நேசன் ; கஞ்சி எழுத்தாளர் அல்லர்-வெறும்

காதல் எழுத்தாளர் அல்லர் ; அஞ்சும் எழுத்தாளர் அல்லர் -தமிழ்

ஆசை எழுத்தாளர் கண்டீர் ! செஞ்சொல் எழுத்தவர் பாதை-பிணிை

தீர்க்கும் மருத்துவ மேதை.

கொக்கு விரிக்கும் இறக்கை-நிறம்

கொண்ட மலர்பல உண்டு ! திக்கில் திரிந்திடும் வண்டு-தொடும்

சித்திர நீலங்கள் உண்டு ; பக்கம் இருக்கும் மரத்தின்-இலைப்

பந்தலில் பொன்மலர் உண்டு : மக்கள் குளிக்கும் குளத்தில்-தமிழ் மங்கலத் தாமரை உண்டு.

கரிய நிறக்கடல் போலே-சிலர்

கண்விழி வட்டம் இருக்கும்.

நரியின் தலையினைப் போலே-தமிழ்

நாட்டின் வெள வால்தலை கண்டீர் !

குருதி நிறைந்த இதயம்-அது

கூம்பிய தாமரை மொட்டாம் !

அரிய உறுப்பாம் இதயம்-அதை

ஆராய்ந்து சொன்னவன் ஹார்வி.

21 2767–2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/23&oldid=645717" இலிருந்து மீள்விக்கப்பட்டது