பக்கம்:வார்த்தை வாசல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைக் கட்டுரை நூல்கள்-பிணிை தீர்க்கும் மருத்துவ நூல்கள்; சந்திர மண்டலச் செய்தி-மழை

சாத்திரம்; தத்துவம்; தர்க்கம்: பைந்தமிழ்ச் சொல்லின் விளக்கம்-தமிழ்ப் பண்ணியல்: மண்ணியல் நுட்பம்; யந்திர வித்தை விளக்கம்-இவை

யாவும் நமக்கிங்கு வேண்டும்.

தாயின்றி வாழ்பவ ருண்டு-மறு தாரம் இலாதவ ருண்டு; சேயின்றி வாழ்பவ ருண்டு-பெருஞ் செல்வம் இலாதவ ருண்டு; வாயின்றி ஊமைய ராகி-இந்த வையத்தில் வாழ்பவ ருண்டு; நோயின்றி வாழ்பவ ரில் லே-வரும்

நோய்களுக் கும் கணக் கில்லை.

நாயை விரட்டிட வேண்டும்-எனில் நம்மிடம் கல்லொன்று போதும் நோயை விரட்டிட வேண்டும்-என்ல

நூறு மருந்துகள் வேண்டும். தீய பரம்பரை நோய்கள் -தரும்

தீமையை வேரொடு வீழ்த்தும் ஆயுள் மருத்துவத் தொண்டு-செயும் அன்பராம் நம்செல்வ ராசன்.

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/22&oldid=645715" இலிருந்து மீள்விக்கப்பட்டது