இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆதி இலக்கிய நூல்கள்-அவை ஆழ்கடல் நீந்தும் கலன்கள்; நீதி இலக்கிய நூல்கள்-அவை
நேர்வழி காட்டிடும் கைகள்: சாதி இலக்கிய நூல்கள்-அவை
சாக்கடை நீரின் புழுக்கள்: வீதி இலக்கிய நூல்கள்-சுக
வேட்டையில் தோன்றிடும் நோய்கள்.
மெத்தைக் கதைகளும் பாட்டும்-வெறி
வேகத்தை அல்லவோ ஊட்டும் ! வித்தை நுணுக்கங்கள் இல்லா-வெறும்
வேடிக்கை நூல்களின் மூலம் புத்தி விளங்குவ துண்டோ?-கரைப் பூவில் நறுமணம் உண்டோ? சித்தம் தெளிந்திட வேண்டின்-குறை தீர்க்கும் சுவடிகள் வேண்டும்.
19