பக்கம்:வார்த்தை வாசல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி இலக்கிய நூல்கள்-அவை ஆழ்கடல் நீந்தும் கலன்கள்; நீதி இலக்கிய நூல்கள்-அவை

நேர்வழி காட்டிடும் கைகள்: சாதி இலக்கிய நூல்கள்-அவை

சாக்கடை நீரின் புழுக்கள்: வீதி இலக்கிய நூல்கள்-சுக

வேட்டையில் தோன்றிடும் நோய்கள்.

மெத்தைக் கதைகளும் பாட்டும்-வெறி

வேகத்தை அல்லவோ ஊட்டும் ! வித்தை நுணுக்கங்கள் இல்லா-வெறும்

வேடிக்கை நூல்களின் மூலம் புத்தி விளங்குவ துண்டோ?-கரைப் பூவில் நறுமணம் உண்டோ? சித்தம் தெளிந்திட வேண்டின்-குறை தீர்க்கும் சுவடிகள் வேண்டும்.

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/21&oldid=645712" இலிருந்து மீள்விக்கப்பட்டது