இப்படிப் பட்டவர். இளேஞர்க் காகப் படைத்த சுவடியே பாட்டுத் தோட்டம். பாட்டுத் தோட்டத்தில் பாரதி இருக்கிரு.ர். பாரதி இருப்பதால் பாரதி தாசனும் இருந்திட வேண்டும். எனினுமவர் இல்லை! முத்தமிழ் மோனே முதலில் வந்தபின் எதுகை வராமல் இருப்பது சரியா ?
'அன்னை காவிரித் தாயே-உன்னைப் பொன்னி என்பது ஏனே ? மண்ணே நன்கு செழிக்கச் செய்து பொன்னை விளைக்கச் செய்தாய்-அதை எண்ணி எண்ணி உழவர் உனக்கு இட்ட பெயரோ பொன்னி !'
என்றிவர் காவிரிக் கன்னியைக் கேட்கும் பாட்டின் அடிகள், பழுத்த புலமையைக் காட்டும் அடிகள் ; கற்பனை வீக்கம் !
பிச்சை இடுவதும் பிச்சை எடுப்பதும் நமக்கவ மானம் நாட்டுக்கும் ஊனம் என்னும் கருத்தில் எழுந்துள்ள பாடல், சாத்திரப் பழமைக்குச் சரியான சவுக்கடி.
'அறிவியல் கற்பேன்-நான் அனுதினம் கற்பேன். பெரிய விஞ்ஞானி-எனும் பெயரும் வாங்குவேன்.
சந்த்ர மண்டலம்-நான் சென்று மீளுவேன். வந்து சந்த்ரனின்-பல விந்தை சொல்லுவேன்.'
24