இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்னும் அடிகள் இந்த நூற் றண்டு மனிதன்விஞ் ஞானியாய் மாற முயல்கிருன்
என்பதை உணர்த்தும் எண்ணச் சுவடுகள். -
- வேடன் தாங்கல் போகலாம் வேடன் தாங்கல் போகலாம் கோடி கோடி பறவை கண்டு ஆடிப் பாடி மகிழலாம்'
என்று சிறுவர் இடத்தில் உரைப்பதும், காரணம் கூறிக் காஞ்சிக் கழைப்பதும், பல்லவர் காலத்துக் கல்ரதம் காணப்
புறப்படு மாமல்ல புரத்துக் கென்பதும்
பயன்தரக் கூடிய பயணப் பாடல்கள்.
- நெடுங்கடல் என்பது, நெய்தல் நிலத்தின் ஒரத்தைக் குறிக்கும் உப்புநீர் விளம்பரம்: என்று நான் பாடி இருக்கிறேன். இவரோ,
- நீலக் கடல் நெளியும் கடல் நிலத்தை விழுங்கி நிற்குது !
முத்துக் கடல்
மூத்த கடல் முதுகில் கப்பல் சுமக்குது !'
என்கிருர். நாள்தொறும் ஏங்கும் கடலின் முதுமையை உணர்த்த மூத்தகடல் என்கிரு.ர்.
குறிப்பிட்ட மூன்றடி கொண்ட பாட்டுநூல்
ஒன்றுநம் நாட்டில் உளதாம் அதன்பெயர் மூவடி முப்பது. மூவடி முப்பதோ,
25