பக்கம்:வார்த்தை வாசல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியக் கிழவர் இடைக்காட னரின் அறிவின் அறுவடை அந்நூல் போலவே,

இலையைப் பறிக்காதே பாப்பா-ஓர் இலைக்குள்ளும் உணர்வுண்டு , இன்னலும் உண்டு : இலையைப் பறிக்காதே பாப்பா.'

என்றும் ; கிளையை முறிக்காதே என்றும் ; சீவ காருண்யச் சிந்தனை ஏறிய மூவடிப் பாடல் முத்திரை பதித்துளார்.

ஏழைப் புலவர்கள் எதிர்பார்த்து நிற்கையில் 'இரும்-பொறும் என்றே இழுத்தடிக் காதவன் இரும்பொறை : அந்தக் கணக்கால் இரும்பொறை, விழித்த வீரமும் மிக்கபே ராற்றலும் ; அரசியல் நுணுக்கமும் அஞ்சா நெஞ்சமும் : கொண்டு விளங்கிய கோமகன் படையொடு முன்னின் றெதிர்த்த மூவனென் பானக் கொன்று வீழ்த்திய குகைப்புலி களத்தில் பட்டு வீழ்ந்தோனின் பல்லேப் பிடுங்கிக் கற்கோட்டை வாயிற் கதவில் பதித்தவன்.

அந்த மன்னனின் சொந்தவர லாற்றைப் பரிதிமாற் கலைஞரும் பாடலாய் வடித்துளார். இந்தக் கவிஞரும் இந்நூலில் தந்துளார்.

இருவரும் தந்துளர் என்ற போதிலும், இவரது பாடலில் இருக்கும் எளிமை அவரது பாடல் அடிகளில் இல்லை.

மணல் வீடு கட்டி மகிழும் சிருர்க்குப் பச்சை மரத்தின் உச்சியைக் காட்டி,

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/28&oldid=645726" இலிருந்து மீள்விக்கப்பட்டது