பக்கம்:வார்த்தை வாசல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்வாழ்க்கை நம்நாட் டார்க்குப் புதுவாழ்க்கை அன்று வீர வேர்வாழ்க்கை அன்றும் இன்றும் விடுதலைக் குரிய வாழ்க்கை. தேர்வாழ்க்கை வந்த தாலே

திறன்குன்றி, வீரம் வீழ்ந்து நார்வாழ்க்கை, பக்தி வாழ்க்கை

நரிவாழ்க்கை வளர்ந்த திங்கே 1.

பாரினில் சிறப்பு மிக்க

படைகொண்டு பகைவர் தம்மை நேரினில் நின்று வென்ற

நிகழ்ச்சியைப் போர்க்க ளத்தில் பாரதம் என்னும் நூலாய்ப்

படைத்துள்ள ஒடை யானின் -சீரிய நூலாம் இந்தச்

சிறுநூலோர் பரணி யாகும்.

தாழிசை, விருத்தம், வெண்பாத்

தளைகொண்ட கும்மிப் பாட்டால், ஏழிசை இன்பத் தோடும்,

வாழிநூல் வழங்கிச் செங்கை

மறவரை வாழ்த்தி, நாட்டின் சூழலை விளக்கி நன்கு

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/69&oldid=645810" இலிருந்து மீள்விக்கப்பட்டது