இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கதிர்ச்செந்நெல் விளைகின்ற ஊராம், மட்டக்
களப்பினிலே பிறந்தமுகில் வாணன் என்பார் அதிர்வேட்டுக் கெதிர்வேட்டுக் கவிஞ ராவார்
அத்தகைய பூகம்பக் கவிஞர் யாத்த புதுநூலைப் பொழுதுபுல ரட்டு மென்னும்
போராட்டப் பிரகடனக் கவிதை நூல்ை உதிக்கின்ற வெளிச்சத்தில் படித்தேன். பாடல்
ஒவ்வொன்றும் துப்பாக்கித் தும்ம லாகும்.
கொடுமைபல புரிந்துவரும் சிங்க ளத்தார்
குழுவுக்கும், தமிழீழம் கேட்ப வர்க்கும் விடுதலைப்போர் நடைபெற்றுக் கொண்டி ருக்கும்
வேளையிலே, இக்கவிஞர் இந்த நூலைப் படையெடுக்க விடுத்துள்ளார் பகைவர் மீது
பாடல்களை அப்பகைவர் படிப்பா ராயின், தொடைநடுக்கம் ஏற்பட்டே தீரும் ஈழம்
துண்டுபடும் என்பதன்ைப் புரிந்து கொள்வர்.
69,
276 7–5