________________
54 அதோடின்றி பிரஷியாவுக்கு ஓடின மற்றொரு வா லிபனை அந்நாட்டு மன்னனுக்கு எழுதி பட்டாளத்தி லிருந்து விடுவித்துத் தன் வீட்டில் வைத்திருந்து அவ னுக்கு ஒன்னறை வருடமாக பெருங்கணக்கும் என்சினீ ரிங்கும் கற்பித்து அவனை மகாபிரடரிக்கினது படையில் என்சினீர்களது தலைவனாக்கி மகிழ்வடைந்தார் நம் வால் டையர். இத்தகைய மகான் நமது வால்டையர். நசுக்கப்படு வற்கும், திக்கற்றவருக்கும் நற்றோழர் அவரே. மதமும், மன்னரும் நசுக்கிய மக்களனைவரும் பிரார்த்திக்கும் மகா ஸீசர் என்னும் சக்கரவர்த்தி போன்றிருந்தார். அவர் தன் காலத்திய அறிவையும், இருதயத்தையும் காக்கக் கங்கணம் கட்டி நின்றார். இப்படியிருந்தும், தம் பகை வரையும் நேசிப்பதாக பாசாங்கு பண்ணும் ஆஷாட பூதிகள் நூற்றைம்பது ஆண்டுகளாகத் தம் அறிவற்றக் கொள்கைகளை வால்டையரின் ஆற்றல் மிக்க ஆராச்சி யினின்று காப்பான் வேண்டி அவரைத் தூஷிக்காத வித மில்லை, திட்டாத வார்த்தையில்லை, அவரிடம் காட்டாத துவேஷமும், குரோதமுமில்லை. வால்டையர் ஓர் பெரிய உன்னத உயரத்திலிருந்து உலகத்தையே சுற்றிப் பார்த்தார். அவரது ஆகாயம் அளவின்றி அகன்றது. அவரிடம் சில குற்றங்கள் இருந் தாலும் அவைகளை அவர் மதாச்சாரியாரிடமிருந்தே கொண்டவர். ஆனால் அவரது குணங்களோவெனின் அவையனைத்தும் அவருடையதேயாகும். அவர் சர்வ மக்களின் கல்விக்கும், அறிவின் அபிவிர் த்திக்கும் சாதகமாக இருந்தார். அதனால் அவரைக்