உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வால்டையரின் சரிதம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

55 கோவிலாட்கள் வெறுக்கலாயினர். உலகிலுள்ள விஷ யங்களனைத்தையும் ஒவ்வொருவருக்கும் கிட்டும்படி செ ய்ய முயன்றதனால் அவரை ஒவ்வொரு மதக்குருவும் வெறுக்கலானான். ஏதேன் என்னும் நந்தவனத்திலுள்ள இழிவு பொருந்திய மூட நம்பிக் நம்பிக்கை என்னும் அரவைத் துரத்தியடித்து ஆதாம் என்பவரின் குழவிகள் அறிவு என்னும் அழகிய பழத்தைப் புசிக்கச் செய்ய முயன்றார் வால்டையர். ஆனால் மடமை என்னும் பொய்க்கனியை விலைக்கு விற்கும் மதாச்சாரியர்கள் இதை மறுத்து அவ ரை நொந்தனர். மக்கள் எல்லோருக்கும் வேண்டிய விஷயங்களை எடுத்துக் கூறும் வித்தகர் அவரே. அவர் காலத்தில் கொள்கைகளைப் பொருத்தமட்டில் அவரினும் பெரிய வழக்கறிஞர் இல்லை என்னலாம். சட்டம் எவ்வாறு இருத்தல் வேண்டுமென்பதையும் எவ்வாறு அது வழங் கப்படவேண்டும் என்பதையும் அவர் நன்குணர்ந்த நிபுணர். அவருக்கு சாக்ஷியத்தின் தத்துவத்தைப் பற் றியும், சந்தேகம், ருசு இவற்றின் வேறுபாட் டையும், நம்பிக்கை விஷய ஞானம் இவற்றின் வித்தியா சத்தைப் பற்றியும் வெகு நன்கு தெரியுமாதலால் அவர், தன் காலத்திய அரசியல் வாதிகளையும், வழக்கறிஞர் களையும் விட அதிகமாக சட்டங்களையும், நீதி ஸ்தலங் களின் துர்ப்பிரயோகங்களையும் திருத்தியமைக்கப்பெரும் பாடு பட்டிருக்கிறார். பள்ளியிலிருக்கும்போது அவர் உலகில் தலை சிறந்த உரையாளர் எனத்தகும். ஸிஸரோ என்பவர் நூல்களை