உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வால்டையரின் சரிதம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

3 GO உமக்கும், காண்பரிய அரண்மனையை எனக்கும் கொடுத் துள்ளார். நான் பணிக்கவும் நீங்கள் பணியவும் செய்து ள்ளார் பரமசிவன். நீதி நிறைந்த பரங்கருணையின் நியா யம் அது' ' மதக் குருக்கள் மக்களை நோக்கிக் கூறுவது: "கட வுள் உம்மை கேவலமாகவும், தற்குறிகளாகவும், எம்மை தூய்மையாகவும், அறிவினராகவும் படைத்துள்ளார். நீங்கள் ஆட்டு மந்தைகள்: நாங்கள் அவைக்குரிய இடை யர், உங்கள் ரோமம் எம்முடையது. இவ்வுலகில் நீங் கள் எமக்குக் கீழ்ப்படியாவிடின் இம்மையில் கஷ்டமும், பரத்தில் தொல்லையும் இடைவிடாது வருத்தும். இது வே கடவுளின் கருணை. "ஏதொன்றுக்கும் காரணம் கேளாதே. காரணம் என்பது ஒரு கட்டுக்கடங்காத பகைவன். ஏதொன்றை யும் மறுக்காதே: மறுப்பதென்பது மனிதனின் தற்பெரு மையின் குழவி, எனவே நீங்கள் எங்கள் வார்த்தைகள் முழுவதையும் நம்பவேண்டும். நமது அதிர்ஷ்ட வசத்திற்கேற்ப, உலகத்தில் இது வரைக்கும், ராஜத்துரோகிகளும், மதத்துரோகிகளும், சிந்தனைக் காரர்களும், ஆராய்ச்சியாளர்களும், சுதந்திர மோஹிகளும், சுத்த அறிவினரும் தோன்றி வந்துள்ள னர். இவர்கள்தான் தம் மனித முன்னேற்றத்திற்காக தம் உயிரையும் தத்தம் செய்துள்ளார்கள். 'மகான்கள்' அல்லது 'பெரியோர்' என்றால் என்ன? திருவள்ளுவர் கூறியபடி 'செயற்கரிய செய்வார் பெரியர்’