உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வால்டையரின் சரிதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4 பெரியார் எனப்படுவோர் மக்கள் தம் அறிவைப் பெருக் கியும், யோசனையின் விசாலத்தை அகல்வித்தும், அச் சம் என்னும் சிறையினின்று மக்களின் மனதை விடுவித் தும், சிந்தைக்கெட்டாத யோசனைக் கடலில் சிறந்த ஞானத்தீவுகளைக் கண்டுபிடித்தும், மனதுக்கெட்டாதவா னந்தன்னில் புதிய பல் விண் மீன்களைத் தோற்றுவித் தும் நலம் செய்பவர் என்னலாம். உண்மையிற் பெரிய வர் என்பவர் மக்கள் தம் போற்றுதலையும், மகிழ்ச்சி தரும் ஸ்தானங்களையும் விரும்பார். எப்போதும் அவர் உண்மையை நாடுவர், இன்பத்தையே தேடுவர். ஆண்டு கிட்டிய இன்பத்தை "யாம் பெற்ற இன்பம், பெறுக இவ் வையகம்” என ஏனைய மக்களுக்கு வரையாது ஈவர். சிற்சில சமயங்களில் பெரியவர் என்பார் தமது உத்தம உண்மைகளாகிய முத்துக்களை மனிதராகிய பன்றிகளிடம் சிதறிவிடுவர். பெரியார் எனப்படுபவர் இருளகத்தொளி ரும் எழில் ஒளியாவர், மூட நம்பிக்கை எனும் இரவை முற்றிலும் அகற்றும் குன்றொளியாவர், ஊக்கத்தை ஊட்டும் உத்தமராவர், பெரியாரெனப்படுபவர் மக்களது உடலை விடுவித்த வீரரும், மனதிற்குச் சுதந்தரமளித்த அறிவினரும் வித்தகரும், ஆவர். அவர்கள்தான் அறி யாமை, அச்சம் என்னும் அவலக்ஷணமிகுந்த அரக்கர் களை வெட்டி வீழ்த்தி, கொடுந் தேவதைகளைக் கொன்று அரியாசனத்தினின்றும் அகற்றி எறிந்தவர். அவர் களே உலகத்தை நாகரீகப்படுத்தியவர். இத்தகைய பெரு மை வாய்ந்த வீரர் படையில், தலைமை தாங்கும் தகைமை வாய்ந்தவர் நாம் இப்போது பேசப்போகும் வால்டை யர் என்னும் பெருந்தகை வள்ளல் ஆவர். ய