________________
5 "வால்டையர்” என்னும் வளமிகும் வார்த்தையைக் கேட்ட உடனே மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவர்; ஆனால் மதக்குருக்களோ மனங்கொதிப்பர். பாதிரி ஒரு வர் காதில் இவ்வார்த்தை பட்டவுடனே ‘போர் முரசின்' ஒலியைக் கேட்டவராவர். தம் செவிதனில் இப்பேர் சேர்ந்தவுடன் இனியவை மொழியும் அவர்வாய் இன்னாத சொற்களும், இடையறாத வசவும் குற்றால நீர் வீழ்ச்சி யெனக் கொட்டா நிற்கும். எனினும் மக்களை விடுவித்த பெரியாருள் வால்டையரே மன்னரென மிளிர்வார். கி.பி. 1694.ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் தேதி ஞாயிறன்று பிரான்ஸ் தேசத்திலே பிறந்தது ஓர் குழவி. பிறந்தவுடனேயே அதன் உயிர்திணரித்திணரித் தடுமாறி இறந்துவிடும்படியான நிலைமையிலிருந்ததால் அதன் பெற் றோர்கள் அதற்கு ஞானஸ்நானம் உடனே செய்வித்தனர். ஏனெனில் அவ்வாறு அவர்கள் அக்குழவிக்கு ஞானஸ்நா னம் செய்யாதிருப்பின் அது இறந்தவுடன் நித்திய நர கத்திற்கு ஆளாகியிருந்திருக்குமாம் ஞான நீர் படாத குழந்தைகளைக் கடவுள் வெறுக்கின்றார் என்பது அவர் களுக்குத் தெரியும். 'ஞான' நீரைத் தெளித்து பிரான் காய்மேரி அரூவே (Francois Marie Arouet) என நாம மிட்டு வாழ்த்திய அந்தப் பாதிரி தன் முன்னம் சிறு துணியாற் சுற்றப்பட்டும், சிறிதும் பிழைப்பதற்கிடமின் றிக் கதறிக்கொண்டு கசிந்தழும் மெல்லிய அக்குழவி சிறிது நாளில், மனிதனின் மனதையும், உடலையும் கொன்றுதின்ன எத்தனிக்கும் கொடியமிருகத்தின் குரல் வளையை நசுக்கிப் பொசுக்கப் போகும் 'நாத்திக வீரர் ஆகும் எனச் சிறிதும் அறிந்திலன்!