பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ லாழும் கவிஞர்கள் படைவிளங்கும் ஆளுமையில் பண்பாடு விளங்குமவன் சொல்லி லெல்லாம் தொடைவிளங்கும் ஒருமாலை இவன்போல மானுடத்தான் தொகுத்த தில்லை கோட்டையில்லை வெண்கொற்றக் குடையுமில்லை குடிமக்கள் இல்லை எந்த நாட்டையுமே ஆளவில்லை அரசனென தவில்வதென்ன என்று கேட்பீர் கோட்டையூர் ஊராகக் குளிர்கருணை ஆடையாகப் பயில்வோர் எல்லாம் நாட்குடியா இங்கிருக்க நல்லாட்சி நடத்துவதால் அரசன் என்பேன். இவை மூன்றும் வள்ளல் அழகப்பர் பற்றிய கையறுநிலைப் பாடல்கள். இவை தெஞ்சை நெகிழ்வித்து கண்ணில் நீர் சொட்டச் செய்யும் பாங்குடையவை. எதுநெறி என்றே அறிகிலாப் போதில் எதிர்வரும் ஒருமலை யானாய் மதுதெறிக் குள்ளே அயலவர் நம்மை மாட்டிட எரிமலை யானாய் இதுதெறி என்றே நறுத்தமிழ் மொழியில் இசைக்கையில் பனிமலை யானாய் புதுநெறி தந்தாய் உளத்தொறும் நின்றாய் புகழ்மலை ஆயினை ஐயா ! செத்தமிழ் கமழும் சந்தனச்சாரல் சிறந்திடும் தனித்தமிழ் குதித்து வத்திடும் அருவி வயங்கிடும் ஒருபால் வளர்த்திடும் சிந்தனை மரங்கள் முந்திவிண் தடவி மூண்டெழும் ஒருபால் முடிவிலா ஏரணக் கொடிகள் வத்திடை மிடைய வளர்தரு சாரல் மன்னிய பொதியில்நீ ஐயா மறைந்தன எல்லாம் வெளிக்கொணர் மலையை மறைஉறை உட்பொருள் அனைத்தும் முறைமுறை உணரத் தருமொரு மலையை முறையிலார் செய்ம்மறை எல்லாம் திரைதனை விலக்கி வெளிக்கொணர் மலையைச் சிறிதும்ஒவ்வாதஒர் முறையில் மறைமலை என்றே உரைத்திடல் என்னோ? மயங்குமால் எஞ்சிறுநெஞ்சம் !