பக்கம்:வாழும் தமிழ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் உலகம் 7

இலக்கணத்தில் மிகவும் முக்கியமான பகுதி சொல். ஆகையினல் தொல்காப்பியச் சொல்லதி காரத்துக்குப் பலர் உரை எழுதியிருக்கிருர்கள். இப்போது கிடைப்பவற்றுள் பழமையானது இளம் பூரணர் என்பவருடைய உரை. புலவர்கள் சிறப்பாகப் படித்து இன்புறுவது சேவைரையர் என்பவருடைய உரை. அவர் வடமொழி அறிவும் வாய்ந்தவர். இடையிடையே வடமொழி இலக்கணச் செய்தி களேயும் ஒப்புமை காட்டிக் கருத்தை விளக்குவார்.

உலகத்தில் உள்ளவற்றைப் பொருள் என்று சொல்கிருேம், அதற்கு ஆற்றல் உண்டு. முன்னதை மாட்டர் (matter) என்றும், பின்னதை எனர்ஜி (energy) என்றும் ஆங்கிலத்தில் உரைப்பார்கள். சிவம் என்றும் சக்தி யென்றும் பிரித்தவர்கள் இந்தப் பிரிவை ஒட்டியே பிரித்திருக்கிருர்கள். பொருளே உணரலாம். ஆற்றலே உணர முடியாது. ஆலுைம் இயங்கும்போது ஆற்றலே உணருகிருேம். ஒடும் சக்தியையுடைய குதிரை இருக்கிறது. கிற்கும்போது குதிரையைக் காண்கிருேம். அதன்பால் ஒடும் ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றல் அது ஒடும் செயலால் தெளிவாகிறது. பொருளின் செய்கையே ஆற்றலேக் காட்டுகிறது. பொருளுக்கு உருவம் உண்டு. அதுபோலவே ஆற்றலுக்கும் செயலாகிய உருவம் உண்டு. குதிரை இருப்பதை அதன் உருவத்தைக் கண்டபோது தெளிந்துகொள்கிருேம். அதன் ஆற்றலே ஆற்றலின் உருவமாகிய ஓட்டத்தி விருந்து உணர்கிருேம்.

ஆகவே, உலகம் பொருளும் அதன் ஆற்றலும் சேர்ந்த ஒன்று. உலக நிகழ்ச்சி இந்த இரண்டின் இணைப்பினுல் உண்டாகிறது. பொருட் பிரபஞ்சத்தில் இந்தப் பிரிவு இருப்பது போலவே சொல் உலகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/16&oldid=645944" இலிருந்து மீள்விக்கப்பட்டது