74 வாழும் தமிழ்
இந்த ஆவலே ஸ்ஸ்பென்ஸ் (Suspense) என்று ஆங்கிலத்தில் கூறுவர். அவளே ஆற்றங்கரையில் கிறுத்தி வைத்த ஆசிரியன் வாசகருடைய உள்ளத்தில் அவள் யாரென்று அறிந்துகொள்ளும் ஆவலேத் துாண்டி விடுகிருன், அதனால் மேலே மேலே படிக்க வேண்டுமென்று வேகம் உண்டாகிறது. படித்த பகுதியில்ை மேலும் படிக்கும் ஆவலேத் தூண்டுவது ஒருவகை இலக்கியச் சுவை. இதனேக் கதையாசிரி யர்கள் அமைக்கிருர்கள். பழைய செய்யுட்களிலும் இந்த முறை உண்டு. - -
சுட்டுப் பெயரை முன்னலே அமைப்பது இந்த உத்தியை உத்தேசித்தே. - -
'அவன் அணங்கு நோய் செய்தான்’ என்று தன் காதலனே எண்ணும் ஒருத்தி பேசுகிருள். அவளுக்கு ஏதோ தெய்வத்தால் நீங்கு வங்ததென்று கருதிப் பூசை போடுகிருன் பூசாரி. அதைக் கண்டு, 'இந்தத் தெய்வம் என்ன செய்யும்? அவனல்லவா இந்தத் துன்பத்தைத் தரும் காதலாகிய நோயை உண்டாக் கின்ை?’ என்கிருள் காதலி. அவன் யார்? பிறகு சொல்கிருள்; "விறல்மிகுதார்ச் சேந்தன்” என்று தன் காதலன் பெயரைச் சொல்கிருள்.
அவனணங்கு நோய்செய்தான்
ஆயிழாய் வேலன் விறல்மிகு தார்ச் சேந்தன்பேர்
வாழ்த்தி
என்று வருகிறது பாட்டு.