கவிஞர் முடியரசர் 147
என்று கவிஞர் கொதித்துக் கேட்கின்றார். 'தமிழ் வழங்காக் கோயிலுள்ளே தலையைக் காட்டேன்’ என்று பாடும் கவிஞர்.
நெஞ்சை உருக்கும் திருவா சகநூல்
நினைக்க இனிக்கும் தேவா ரங்கள்
அஞ்சலி செய்திட உதவா என்றால்
என்று ஆத்திரமாக-ஆவேசமாக-எடுத்து மொழி வதைக் காண்க. தமிழ்த்தாய் எங்கும் கொலு வீற்றிருக்கவேண்டும் என்னும் கவிஞர் நல்லுள்ளத் தினை இதனால் நன்கறியலாம்.
'முன்னைப் பழம்பொருளே-வேந்தர்
மூவர் உயிர்த்தமிழே!
கன்னற் சுவையமுதே என்றன்
கண்ணின் மணிவிளக்கே!
என்னைப் பழிப்பதனை-நான்
ஏதும் நினைப்பதில்லை.
உன்னைப் பழிப்பவனைப்-பகையாய்
உள்ளம் கினைக்கு தம்மா!
தீங்குனச் சாருதென்றால்-என்றன்
சிந்தை கொதிக்குதம்மா!
பாங்குனை மேவுதென்றால்-நெஞ்சம்
பாய்ந்து மகிழுதம்மா!’
என்று தண்டாத தம் தமிழ்க்காதலை 'உயிர்த் தமிழே' என்ற கவிதையில் வெளியிட்டுள்ளார்.