168 வாழையடி வாழை
'கலைச்செல்வி’ என்ற கவிதையில்,
'செந்தீப் படலமாய் அந்திப் பொழுதுவான்?
சித்திரம் தீட்டும் புலத்தினிலே-வர்ண
விசித்திரம் கூட்டும் நிலத்தினிலே-பிறகு
வந்து முகக்கோலம் தந்து மறையும்
வளர்பிறைக் கோட்டுப் பிரபையிலே-அவள்
களைபெறும் பாட்டுச் சுரபியடா’
என்ற பகுதியில் ஓசை இன்பம் நயமாக உளது.
'பொங்கு திரைக்கடல்
நுங்கு நுரைக்கழல்
பொண்கிண் கிணிபுலம்ப-பரி
சங்கின் மணி சிலம்ப,-பனிக்
கங்குல் திரைக்குள்
கதிர்முகம்காட்டி,விண்
காலைக்கூத் தாடினாளே!-எழில்
வாலைக் கூத்தாடினானே’
என்ற பாடலில், 'அன்னையின் கூத்து' அழகுறச் சித்திரிக்கப்பட்டுள்ளது; "பிறை நிலா’ எனும் கவிதை நல்ல அழகு விளக்க மாகும்.
'அந்தி யெனும் மகள்
வந்திருள் ஏற்ற
அகல் விளக் காகும்.நிலா!-வானப்
புகல் விளக்காகும் நிலா!
என்றும்,
'கங்குல் மலர்களோர்
நங்கை பறித்திடக்
கைவிரல் ஆகும் நிலா;-நளின
மெய்விரல் ஆகும் நிலா!’
என்றும்,