பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I Il of நாட்டில் இதுபோன்ற நியதிகள், மரபுகள் ,மார்க்கங்கள் இருக்கலாம். என்ருலும். எளிதாகப் பின்பற்றப்படவும், இயல்பாக பலனளிக்கக்கூடியதாகவும் இருப்பது ஆடுகளத் தில்தான், சிறிய விஷயத்தில் சிரத்தையுடன் இருப்பவன் தான். பெரிய விஷயங்களிலும் திறமையுடன் இருப்பான், ஆகவேதான், ஆடுகளமும் இந்த நுணுக்கத்தை நுண்ணிதின் நிறைவேற்றுகிறது. ஒருவன் ஆடுகளத்தினுள் நுழைந்து இருந்து விளையாடி, பிரிந்து வெளியேறுகின்ற வரைக்கும், இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று வழிகளை அமைத்து, விளக்கிக் காட்டி வழி செய்கிறது. தெளிவாக்குகின்றது. நாட்டிலே உள்ள சட்ட திட்டம், மக்களுக்கு நேர் வழியைக் காட்டி வரும் நியதி போலவே, ஆடுகளத்தினுள் ஆடப்படுகின்ற ஆட்டங்களுக்கு ஏற்றவாறு விதிகள் நிறைந்து கிடக்கின்றன. சட்டத்தை மீறுவோர் வழக்கு மன்றத்தில் தண்டிக்கப்படுகின்ருர்கள். அதுபோலவே ஆட்டத்தில் தவறு செய்தவர்களும் தண்டனை பெறு கின்ருர்கள். கொடுமையான குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை தரப்படுவது போலவே, முரட்டுத்தனமாகவும் முட்டாள் தனமாகவும் ஆட்டத்தில் ஆடுபவர்கள், ஆட்டத்தை விட்டே வெளியேற்றப்படுகின்றனர். தெரியாமல் செய்யும் தவறுகள் மன்னிக்கப்படுவதுபோலவே, இங்கும் ஒவ் வொரு அறியாத் தவறுக்கும் எச்சரிக்கை அளிக்கப்படுகிறது. வழக்கு மன்றத்தில் நீதிபதிபோல, ஆடுகளத்தில் நடுவர் இருக்கிரு.ர். பார்வையாளர்களாகவும், தீர்ப்பை ஆமோதிப்பவர் களாகவும் சுற்றி இருந்து கண்டு மகிழ்கின்றனர் மக்கள்.