பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 3 || வெற்றியின் ரகசியமானது, நீ விரும்பியதைச் செய்ை வதால் மட்டும் வந்து விடுவதில்லை. ஒருவன் நேரா நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அவ்வாறு செய்யும் பொழுது தான் வெற்றி வருகிறது’ என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வெற்றியின் விதியானது என்ன வென்ருல், உனக்கு. என்ன முடியுமோ, எவ்வளவு தெரியுமோ. அதனை ஒழுங்காக செய், என்பதுதான், இதுவே உண்மையான வழியுமாகும். - வெற்றி என்பது எப்பொழுதும் கிடைத்து விடுவதில்லை. எதிர்பார்த்ததை விட, எதிர்பாராமல் கிடைக்கக் கூடிய வெற்றிகளும் உண்டு. * எதிர்பாராமல் உனக்குக் கிடைக்கின்ற வெற்றியானது, அடிக்கடி ஏற்படுகின்ற தோல்வியை க் காட்டிலும் அபாயகரமானது என்பதை உணரவேண்டும். ஏனெனில், தோல்வியானது சாதாரணமாக, அறிவைத் துாண்டி விடுகிறது. எதிர்பாராத வெற்றியோ ஒருவனை சிந்திக்கும் திறமையை தொலைத்து, அவனை அவனி: லிருந்து பிரித்து அப்புறப்படுத்தி, தற்பெருமைப் படுகுழியில் தள்ளி விடுகிறது. ஆகவே தான், வெற்றிச் சிகரத்தை எட்டிப் பிடிக்கச் செல்பவர்கள், இடையிலே கிடைக்கும் சிறிய வெற்றிக்காக மயங்கி விடக்கூடாது. சிறிய வெற்றியின் இறுமாப்பு, கிடைக்க இருக்கும் பெரிய வெற்றியின் போக்கையே திசை மாற்றி விடும். ஆகவே, விழிப்புடன், முனைப்புடன், உழைப்புடன் முன்னேறுபவர்களை வெற்றித் தேவதை. அழைத்து அணைத்துக் கொள்வாள் என்பதையும் மறந்து விடக்கூடாது. -