பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136


அதனால்தான் ஆடுகளத்தால் அரிய பெரிய சாதனைகை வீரர்கள் மூலம் செய்து காட்ட முடிகிறது. ஆடுகளங்களில் அதிசயங்கள் நடக்கின்றன என்ருல், அது, அறிவுபூர்வமான, உணர்வுபூர்வமான காரியங்களில் பங்கு பெறுபவர்களே ஈடுபடுத்தி விடுவதால்தான். விரும்பி விளையாட வருகின்றவர்களின் கருத்திலே வித விதமான உணர்வுகளையும், எழுச்சிகளையும், கருத்துக் களையும், புதிய திறமைகளையும் புகுத்தி விடுவதுதான் ஆடுகளம் செய்கின்ற அற்புத காரியங்களாகும். வேகம் நிறைந்தவன் விவேகியாகப் பணியாற்றும் பொழுது விபத்து இல்லாமல் பங்கு பெறுகிருன், முடிவு வரை மாற்ருரும் வியந்து பாராட்டும் அளவுக்கு விளையாடி மகிழ்கிருன். மற்றவர்களையும் மகிழ்விக்கிறன். வேகம் நிறைந்தவன் வேகமில்லாமல், சூது மதி யுடன், சூழ்ச்சி நெறியுடன், பொருமை மனதுடன்பொருதும் பொழுது அவன் உடலால் ஊறு அடைவது மட்டுமல்ல. உள்ளததாலும் நலிகிருன் உணர்வுகளாலும் வருந்துகிருன். இறுதியில் ஏற்படுகின்ற முடிவிலுைம் அவன் ஏமாற்றம் அடைகிருன் எந்தத் திசையில் திரும்பிலுைம், அவன் எதிர் பாாத்தது கிடைக்காத ஏக்கத்தாலேயே அடைய வேண்டிய நலன்களையும் சுகங்களேயும் இழக்கிருன். ஆகவே, ஆடுகளம் தன்னிடம் வரும் வீரர்களிடம் எதிர்பார்ப்பது உண்மை வழி செல்லும் முனைப்பு. உறுதி யான முறையிலே செய்கின்ற உழைப்பு. அதனுல் உற்சாகம் அளிக்கக்கூடிய களிப்பு. இவற்றைத்தான் ஆடுகளம் எதிங். பார்க்கிறது. இனிய பரிசாக வழங்குகிறது.