பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 லார்க்கே உரியதாம். அது அவர்களின் தனிக் கலையுங்கூட! கண்ணகியின் கற்புச் செயல் கற்புக் கணிகலமாகிய கண்ணகியை, வாழ்க் கையில் இன்பமின்றித் தவிக்கவிட்டான் கணவன் கோவலன். மாதவியை அடுத்திருந்தான். பின் பிழையுணர்ந்து வீடு திரும்பின்ை. மனைவியை மதுரைக்கு அழைத்துச் சென்றன். மாதவி வீட் டில் தங்கினன். ஆங்கு உணவுண்டபின் கண் ணகியை அருகில் அமர்ச் செய்தான். தன் குற் றங்களே யெல்லாம் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்பவன்போல் புலம்பத் தொடங்கினன் : 'இர வில், கரடு முரடான வழிகளில் கால் நோவ உடன் வந்த கண்ணகியே! உன் அன்பை என்னென் பேன்! உன் உள்ளம் அறியாமல் வாணுளே வீணுள் ஆக்கினேன். உனக்கு இன்பமே அளித்தே னில்லை. துன்பக் கடலிலேயே தோயச் செய் தேன். அவ்வமயம் உன் மனநிலை. எவ்விதம் இருந்ததோ! ஆ கொடியேன், என் செய்தேன்?" என்றெல்லாம் பலகூறி அரற்றினன்; பிதற்றி ன்ை ; ஏங்கின்ை. கேட்ட கண்ணகி உம்மைப் பிரிந்திருந்த காலத்தில் எனக்கு நல்ல உணவில்லை; உயர்ந்த ஆடை அணிகலன்கள் கிடைக்கவில்லை; உம்மை மணந்து கொண்டதால் துன்பமேயன்றி இன்பம் ஏது ' என்றெல்லாம் மொழிந்தாள் என்று எண்ணு கின்றீர்களா ? இல்லை யில்லே! “ என் அருமைத் தலைவரே இராவழி நடந்ததால் எனக்கொன்றும் அலுப்புத் தோன்றவில்லை. காரணம் நும்முடன் வந்தமையே! தும்மைப் பிரிந்து தனித்திருந்த காலமே - அதிலும் தனிமைத் துன்பத்தால் - இன்பமின்றிக் கழிந்தது. அப் போழ்து பெருங்