பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கின்றது. மேலும், வீடென ஒன்றுகொண்டு, அதில் கணவன் மனைவியென இருவர்கூடி இல் வாழ்க்கை நடாத்துவது, உலகிற்கு உதவி உழைப் பதற்குத் தானே! மக்களிடையே விருந்தோம்பும் வேளாண்மையில்லை யென்ருல், உடல் நலம் குன்றி உழைக்க முடியாதவர் என்செய்வர்? மனைவியிழந்தவர், மணவாளன யிழந்தவர், தாயற்ற பிள்ளைகள் ஆகிய எல்லோரும் உண்பது எப்படி? உலகில் மக்கள், எச்சிற்கையால் காக்கை ஒட்டாமலும், ஈரக்கையை உதருமலும் இருந்தால், மக்கள் தொகை வரவரக் குறைந்து போகும் என்பதில் தடையில்லை. ஒருவர்க்கொரு வர் உதவி ஒப்புரவு செய்துகொண்டாலே எவரும் எங்கும் வாழமுடியும். வாழ்க்கையின் அடிப்படை இதுவாகவே இருக்கவேண்டும். இவற்றையெல் லாம, - - விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று , இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு ' - முதலிய திருக்குறள்களால் திருவள்ளுவர் விளக்கி ள்ளார். மேலுமவர், எவ்வளவு பெருஞ் செல்வரா யிருப்பினும், விருந்தோம்பாதவர் ஏழைகளாகவே கருதப்பட்டு இழிக்கப்படுவார்கள் என்னும் கருத்தில், உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஒம்பா மடமை மடவார்கண் உண்டு ' என்னும் குறளைக் கூற மறந்தாரில்லை. நாமும் அவர் மொழிகளை மறக்கலாமா ? இவ் விருந்தோம் பலும் பெண்ணில்லா வீட்டில் சடைபெற வழி யில்லை. இத் தொண்டில் பெரும்பங்கு பெண்பா 2