பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வாழ்வியல் நெறிகள்

குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத்து இரவுபகற் செய்யும் திண்பிடி யொள்வாள் விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர்

-முல்லைப்பாட்டு

மலிதிரை பூர்ந்துதன் மண்கடல் வெளவலின் மெலிவொடு மேற்சென்று மேவார் காடிடம்படப் புலியொலி வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர்கெண்டை வலியினான் நீக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

-முல்லைக் கலி. 104

கார்நாற்பதில் ஒன்று முதல் ஐந்து சொல் வரை ஆகிய அடைகள் காணப்படுகின்றன. ஒருசொல் அடைகள் எல்லாம பெரும்பாலும் இயற்கைப் படப் பிடிப்புகளாகக் காணப்படுகின்றன. சில செயற்கை வெளிப்பாடுகளாகவும், சில இயல்பு வெளிப்பாடுகளாக வும் அமைகின்றன. இருசொல் அடைகளும் இயற்கைப் படப்பிடிப்புகளாகவே அமைகின்றன. ஒன்று மட்டும் மாதரை வருணித்து கிற்கின்றது. மூன்று சொல் அடைகள் மாதர் வருணனையாகவே அமைகிறது. நான்கு சொல்லால் ஆகிய அடை ஒன்று மட்டுமே காணப்படுகிறது. அது செயற்கை வெளிப்பாடாக அமைகிறது. ஐந்து சொல்லால் ஆகிய அடை ஒன்று மடந்தை ஒருத்தியைச் சித்திரிக்கின்றது.

பொருகடல் நுண்ணரும்பு } ஒரு சொல்

வரிவளை ஆடு மகளிர்

பெருங்கலி வானம் இரு சொல்

நறுந் தண் கார் ஏக்தெழில் ஆ.)