பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| சாவி 167 எல்லோரும் கை தட்டி நகைத்தனர். கடைசியில் ருக்கு ஏமாந்திருந்த வேளையில் தேங்காயைப் பறித்துக் கொண்டுவிட்டான் அவன். அதைக் கண்ட தோழியர்கள் ராஜாவைப் பார்த்து, இது பெரிய ஆண் பிள்ளைத்தனமோ? அடி ருக்கு தேங்காயை நீ இழுத்துக் கொள்ளடி" என்றனர். “ஒரு தேங்காயை வைத்துக் கொண்டு எதற்காக சண்டை போடுகிறார்கள்? ஆளுக்கொரு தேங்காயை கொடுத்து விடலாமே!” என்றாள் அமெரிக்க மாது ஒருத்தி. கடைசியில், அத்தையும் மாமியும் வந்து ஆரத்தி சுற்றிக் கொட்டியதும் நலங்கு வைபவம் முடிவுற்றது. சீரியாக ஆறு மணிக்கு ரிஸெப்ஷன் ஆரம்பமாயிற்று. சங்கீத வித்வான்களை மிஸஸ் ராக்ஃபெல்லருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் பஞ்சு. பிள்ளைக்குத் தகப்பனாரான லால்குடி கோபாலய்யர் வயலின் வித்வான் எங்க ஊர் பிள்ளையாண்டான் என்று பெருமையோடு சொல்லிக் கொண்டார். - - 'மிருதங்க வித்வான் எங்க ஊர், பால்காட்' என்று சொல்லிச் சிரித்தாள் லல்லி. 'சொந்த ஊர் அபிமானத்தைப் பாருங்களேன்' என்றான் பஞ்சு. - "எங்க ஊர் ஆசாமி இங்கே யாரும் இல்லையா?" என்று சுற்று முற்றும் பார்த்தபடியே கேட்டு விட்டுச் சிரித்தார் அரியக்குடி. 'கச்சேரி முடிந்ததும் இரவு டின்னருக்கு எல்லாரும் இருந்து சாப்பிட்டு விட்டுப் போக ;- - -- வேண்டும்' என்று உபசரித்தாள் மிஸஸ் ராக்ஃபெல்லர். இன்னொரு பக்கத்தில் டீ | பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. 1, ஏதாவது புதுமையாகச் செய்ய , }/. ہے۔ ان