பக்கம்:வாஷிங்டனில் திருமணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வாஷிங்டனில் திருமணம் I கார்கள், ஜார்ஜ் டவுன் ஜாகைக்கு முன்னால் போய் நின்றன. அம்மாஞ்சியும், சாம்பசிவ சாஸ்திரிகளும் காரைவிட்டு இறங்கியதுதான் தாமதம். உடனே ஸ்நானத்துக்குப் புறப்பட்டுவிட்டனர். இருவரும் இன்னொரு காரை எடுத்துக் கொண்டு பொடோமாக் நதிக்கரை ஓரமாகவே துணி துவைப்பதற்கு வசதியாகக் கல் இருக்கிறதா என்று பார்த்தபடியே போய்க் கொண்டிருந்தார்கள். "அதோ, அதோ ஒரு கல்!" என்றார் சாஸ்திரிகள். 'டிரைவர் ஸார் நிறுத்துங்கோ' என்றார்.அம்மாஞ்சி. டிரைவர் காரை நிறுத்தியதும் இருவரும் நதியில் இறங்கிக் கல்லை வாட்டமாகப் புரட்டிப் போட்டுக் கொண்டு வேட்டி துவைக்கத் தொடங்கினர் அவர்கள் இருவரும் துணி துவைக்கும் சத்தத்தைக் கேட்டுவிட்டுச் சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் வேடிக்கை பார்க்க வந்துவிட்டனர். சற்று நேரத்துக் கெல்லாம் அந்த இடத்தில் பெரும் கூட்டம் கூடி விட்டது. - "வாஷிங்டனில் கூட ரொம்பப் பேர் வேலை வெட்டி இல்லாமல் இருப்பார்கள் போலிருக்கிறதே! நாம் வேட்டி துவைப்பதை ஒரு அதிசயமாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்களே! என்றார் சாஸ்திரிகள். "ஆமாம்; மெட்ராஸில் கூவம் நதியிலே எருமை மாடுகள் குளிப்பதை நம் ஊர்க்காரர்கள் வாராவதி மேல் கவிந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதில்லையா? அந்த மாதிரி தான்' என்றார் அம்மாஞ்சி. "மடேர் மடேர் என்று கல் மீது வேட்டியை ஓங்கி அறைந்தார் சாம்பசிவ சாஸ்திரிகள். -