பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பொருள் கடைப்பொருளாகிறது

கவிதை ஒரு தொழிலாய், வணிகமாய் மாறிவருகிறது

என்று நான் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு நண்பர் ஒருவர், கவிதையின் கருப்பொருள் மட்டுமா, மனிதனின் கருப்பொருள் கூட இனிமேல் கடைப்பொருள் ஆகிவிடும் போல் இருக்கிறது.... காலம் எப்படியெல்லாம் போய்க்கொண்டிருக்கிறது பார்த்தீர்களா என்று சொல்லித் தம் கையில் வைத்திருந்த ஆங்கில தினசரியிலிருந்து வெட்டி எடுத்த - ஒரு கட்டுரையைக் கொடுத்தார்.

மனித உயிர் தாயின் கருப்பையில் கருவாய் இருந்து குழந்தை உருவாய் வெளிவருமுன் பலநிலைகளைப் பெறுகிறது; கருவளர்ச்சி பெற்று முதிர்ச்சியுற்றுப் பிண்டம் (Foetus) என்றும் பெயர் பெறுகிறது.