பக்கம்:விசிறி வாழை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து பதின்ைகு 148

விமானத்தில் போய்க்கொண்டிருந்த சேதுபதியின் உள்ளத்திலும் அமைதியில்லை. ஊரை விட்டுப் புறப்படும் போது அவர் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டுதான் புறப்பட்டார். ஆலுைம் பார்வதியிடம் சொல்லிக் கொள் ளாமல் வந்தது பெரும் குறையாகத் தோன்றியது அவருக்கு. அடுத்தகணம் பார்வதிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவளிடம் நான் ஏன் சொல்லிக் கொள்ளவேண்டும்?’ என்று தமக்குத் தாமே கேட்டுக்கொண்டார்.

அவர் உள்ளத்தில் அமைதியில்லே. பார்வதியைப் பற்றியே மீண்டும் மீண்டும் எண்ணமிட்டவராக விமானத் தின் பலகணி வழியாக விண்வெளியை வெறிச்சிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/147&oldid=687000" இலிருந்து மீள்விக்கப்பட்டது